
10 ஆண்டுகளில் இலங்கையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?- மக்களவையில் மத்திய அரசு தகவல்
- கடந்த 10 ஆண்டுகளில் (2015-25) தமிழ்நாடு மீனவர்கள் 2,870 பேர் இலங்கை கடற்படையால் கைது.
- 10 ஆண்டுகளில் 2,839 மீனவர்கள் மற்றும் 345 படகுகளை விடுவித்துள்ளது இலங்கை கடற்படை.
கட்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மீனவர்களை கைது செய்வதுடன், படகுகளையம் பறிமுதல் செய்கிறது. படகுகளை திரும்ப பெற அதிக அளவிலான அபராதம் விதிக்கிறது.
தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் தமிழக திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய வெளியுறவுத்துறை சார்பில் அளித்த பதில் பின்வருமாறு:-
கடந்த 10 ஆண்டுகளில் (2015-25) தமிழ்நாடு மீனவர்கள் 2,870 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.. 454 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 104 மீனவரகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
10 ஆண்டுகளில் 2,839 மீனவர்கள் மற்றும் 345 படகுகளை விடுவித்துள்ளது இலங்கை கடற்படை.
இவ்வாறு வெளியுறவுத்துறை பதில் அளித்துள்ளது.