தமிழ்நாடு
வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழந்தது
- சிறு வயதில் இருந்து இடுப்பு திசுக்கள் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த சிங்கம் கடந்த ஒரு மாதமாக எழுந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டு இருந்தது.
- டாக்டர்கள் மற்றும் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர்கள் தீவிரமாக அந்த சிங்கத்துக்கு சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
வண்டலூர்:
சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகிறது. வண்டலூர் பூங்காவில் ராகவா என்ற ஆண் சிங்கம் மற்றும் கவிதா என்ற பெண் சிங்கத்துக்கு கடந்த 2011 -ம் ஆண்டு ஜூன் மாதம் வீரா என்ற ஆண் சிங்கம் பிறந்தது.
சிறு வயதில் இருந்து இடுப்பு திசுக்கள் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த சிங்கம் கடந்த ஒரு மாதமாக எழுந்து நடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து பூங்கா டாக்டர்கள் மற்றும் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர்கள் தீவிரமாக அந்த சிங்கத்துக்கு சிகிச்சைகளை மேற்கொண்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிங்கம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.