நடிகை விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50,000 கொடுத்து உதவி செய்தேன் - சீமான்
- ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம், புகார் கூறிவிட்டாலே குற்றவாளி போல் முத்திரை குத்துவதா?
- நானே தெருக்கோடியில் நின்னுக்கொண்டு இருக்கேன். என்கிட்ட எங்க 2 கோடி இருக்கு.
தருமபுரி:
விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
* என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால் பாலியல் வழக்கு.
* நடிகை சொன்னாலே அது குற்றம் ஆகிவிடுமா?
* ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம், புகார் கூறிவிட்டாலே குற்றவாளி போல் முத்திரை குத்துவதா?
* கல்லூரியில் படிக்கும் பிள்ளையை கடத்திச்சென்று கற்பழித்தது போல் சித்தரிப்பதா?
* எனக்கு திருமணம் ஆகும் போது அதனை தடுத்து நிறுத்தி இருக்கணும்.
* சிறையில் இருந்து கருக்கலைப்பு செய்த ஒரே ஆள் நான்தான்.
* ஓராண்டில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளன் நானாகதான் இருப்பேன்.
* நானே தெருக்கோடியில் நின்னுக்கொண்டு இருக்கேன். என்கிட்ட எங்க 2 கோடி இருக்கு.
* உதவின்னு கேட்கும் போது கொடுத்து உதவுறதுதான். அவங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.