என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழக்கு பதிவு
கடலூர் அருகே பெண்ணை திட்டி தாக்கிய 4 பேர் மீது வழக்கு
கடலூர் அருகே பெண்ணை திட்டி தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த கோரப்பட்டு சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த உறவினர்கள் புவனேஸ்வரியை கண்டித்ததால் ஜெயபாலிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று புவனேஸ்வரிடம் ஜெயபாலன் பேச முயற்சி செய்த போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெயபால் புவனேஸ்வரியை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் ஜெயபாலுக்கு ஆதரவாக மூன்று பேர் புவனேஸ்வரியை திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த ஜெயபால், சிவமணி, பாண்டித்துரை, சந்தோஷ் குமார் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அடுத்த கோரப்பட்டு சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த உறவினர்கள் புவனேஸ்வரியை கண்டித்ததால் ஜெயபாலிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று புவனேஸ்வரிடம் ஜெயபாலன் பேச முயற்சி செய்த போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெயபால் புவனேஸ்வரியை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் ஜெயபாலுக்கு ஆதரவாக மூன்று பேர் புவனேஸ்வரியை திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த ஜெயபால், சிவமணி, பாண்டித்துரை, சந்தோஷ் குமார் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






