search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பேராவூரணி அரசு கல்லூரியில் 31-ந்தேதி மாணவர் சேர்க்கை
    X

    பேராவூரணி அரசு கல்லூரியில் 31-ந்தேதி மாணவர் சேர்க்கை

    • ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் 5 புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
    • கல்வி கட்டணம் முழுவதும் செலுத்திய பிறகே சேர்க்கை பூர்த்தியாகும்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராணி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-24 கல்வி ஆண்டிற்கு இணைய வழி மூலம் விண்ணப்பித்த மாணவர்க ளுக்கு மே 31 ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    முதல் நாளில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திற னாளிகள், தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. ஜூன் 2ம் தேதி பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 3ஆம் தேதி வணிகவியல், வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 5ஆம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோர் அல்லது பாதுகாவ லருடன் வர வேண்டும்.

    கலந்தாய்வுக்கு வரும்போது உரிய மதிப்பெண் சான்றி தழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ்கள், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் 5 புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

    கலந்தாய்வில் ஒரு பாடப்பிரிவில் சேர்க்கை பெற்ற பிறகு வேறு பாட பிரிவிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

    ஒரு பாடப்பிரிவில் சேர்க்கை பெற்ற பின்னர் வேறு பாடப் பிரிவிற்கு மாற்றம் செய்ய அனுமதிக்க இயலாது.

    கல்வி கட்டணம் முழுவதும் செலுத்திய பிறகே சேர்க்கை பூர்த்தியாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×