என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி-பேதி
- 17 பேர் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், சித்தமல்லி அருகே உள்ள புலவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார்.
இவரது மனைவி நித்தியாவிற்கு நேற்று வளை காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு நித்தியாவை வாழ்த்தினர்.
பின்னர் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அப்போது உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்ப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கும், 17 பேர் சீர்காழி அரசு மருத்துவமனைக்கும், மீதமுள்ளவர்கள் வைத்தீஸ்வரன்கோவில் ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுகுறித்து சீர்காழி, மயிலாடுதுறை, மணல்மேடு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்