என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லை கோர்ட்டு வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
    X

    விழாவில் மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் துணிப் பைகள் வழங்கப்பட்ட காட்சி.

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லை கோர்ட்டு வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

    • மாவட்ட நீதிபதி சீனிவாசன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட கோர்ட்டு வளா கத்தில் வைத்து 500 மரக்கன்றுகள் வழங்குதல்-நடுதல் மற்றும் 500 துணிப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி சீனிவாசன் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கூடுதல் சார்பு நீதிபதி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர் இசக்கியப்பன் வரவேற்று பேசினார்.

    மாவட்ட நீதிபதி நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சமீனா முன்னிலை வகி த்தார். வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், வக்கீல் சங்க செயலாளர் காமராஜ், கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன், கிராம உதயம் ஆலோ சனை குழு உறுப்பினர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் ஆகி யோர் மரக்கன்றுகள் வள ர்ப்பதன் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினர். தலைமை குற்ற வியல் நீதித்துறை நடுவர் மனோஜ்குமார் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட நீதிமன்ற, நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், கிராம உதயம் உறுப்பினர்கள், பொது மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் துணிப் பைகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×