search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
    X

    பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

    • போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 பேர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு தென்னந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 பேர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இதில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சேட்(42), மாயவன் (61),குப்புசாமி(43), ரஞ்சித்குமார் (45),சந்திரன்(52), நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சக்திவேல் (53), ஒழகூர்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (50) மற்றும் குப்புச்சிபாளையம் அருகே உள்ள பொய்யேரியை சேர்ந்த ஜெயக்குமார் (49) ஆகிய 8 பேர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×