என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி ஸ்பிக் நகரில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- தூத்துக்குடி நகர மத்திய வியாபாரிகள் சங்கத்துக்கு உட்பட்ட ஸ்பிக்நகர், முத்தையாபுரம், முள்ளக்காடு, எம் சவேரியார் புரம் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் ஸ்பிக்நகரில் நடைபெற்றது.
- காவல்துறை முழுமையாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகர மத்திய வியாபாரிகள் சங்கத்துக்கு உட்பட்ட ஸ்பிக்நகர், முத்தையாபுரம், முள்ளக்காடு, எம் சவேரியார் புரம் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் ஸ்பிக்நகர் ஞானமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சின்னதங்கம் தலைமை தாங்கினார். இந்து வியாபாரிகள் சங்க தலைவர் தனராஜ், முள்ளக்காடு சங்கத் தலைவர் முனிய தங்கம் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கடந்த சில மாதங்களாக முத்தையாபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவங்கள், கஞ்சா விற்பனை பெருகிவிட்டன. இதில் காவல்துறை முழுமையாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மேலும் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் சார்பாக பொதுமக்கள் வியாபாரிகளுக்கு ஓர் அறிவிப்பு என்ற பெயரில் துண்டு பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த இரண்டு, மூன்று, மாதங்களாக முத்தையாபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருட்டு, வழிப்பறி, கஞ்சா, ரவுடியிசம் பெருகிவிட்டன.
இதுவரை காவல் துறையால் இவைகளை கட்டுப்படுத்தவோ, குற்ற வாளிகளை கண்டு பிடிக்கவோ முடியவில்லை. பலமுறை குற்றவாளிகளை கண்டுபிடித்து கொடுத்தும், மனுக்கள் அளித்தும் இது வரை எந்த பலனும் இல்லை. ஆகையால் வரும் காலங்களில் தங்களின் உடைமை களையும், பணத்தையும் தாங்களே பாதுகாத்திட முத்தையாபுரம், ஸ்பிக்நகர், எம். சவேரியார்புரம், முள்ளக்காடு பகுதி அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் சார்பாக கேட்டுக்கொள்கி றோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்