search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே தொகுப்பு வீடு சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்து மூதாட்டி படுகாயம்
    X

    காயமடைந்த ஆதிலட்சுமியை படத்தில் காணலாம்.

    கடலூர் அருகே தொகுப்பு வீடு சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்து மூதாட்டி படுகாயம்

    • மேற்கூறை யிலிருந்து சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து ஆதிலட்சுமி மீது விழுந்தது.
    • ஆதிலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த அழகிய நத்தம் காலனியை சேர்ந்த வர் ஆதிலட்சுமி (வயது 70). இவர் தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு தொகு ப்பு வீட்டில் மேற்கூறை யிலிருந்து சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து ஆதிலட்சுமி மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் கதறி துடித்து அழுதார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக தலையில் காயமடைந்த ஆதிலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆதிலட்சுமிக்கு டாக்டர்கள் உடனடி யாக சிகிச்சை அளித்த னர்.

    ஆதிலட்சுமி வசித்து வந்த தொகுப்பு வீட்டில் ஏற்கனவே ஆங்கா ங்கே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை காரணமாக கட்டிடம் மழை நீரில் ஊறி மீண்டும் சிமெண்ட் காரைகள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தூக்கணா ம்பாக்கம் போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×