என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
- ஆண்கள், பெண்களுக்கான சீனியர், ஜீனியர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது.
- 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தஞ்சாவூர் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இது குறித்து தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை போட்டி கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்களுக்கான சீனியர், ஜீனியர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது.
இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவிகளான ரேனுகா தங்க பதக்கம், தமிழ் அழகி வெள்ளி பதக்கம், பிரீத்தி வெள்ளி பதக்கம், அனிதா வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். மேலும், மாணவர்கள் ரிஃபாயின் கபூர் தங்க பதக்கம், சந்தோஷ் வெள்ளி பதக்கம், சூர்யா வெண்கலம் பதக்கம், ஜீவா வெண்கலம் பதக்கம், ஹரிஹரனன் வெண்கலம் பதக்கம், சஞ்சய் குமார் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளனர்.
பயிற்சியாளர் கிருஷ் ரத்தன் தலைமையில் சென்றனர். இவர்களுக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலர் ஜெயேந்திரன் வாழ்த்து கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்