search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி  தாலுகா அலுவலகத்தில் 1000 பேருக்கு இலவச பட்டா வழங்க ஏற்பாடு
    X

    கிராம நிர்வாக அதிகாரிகள் கூட்டம் தாசில்தார் சிவா.கார்த்திகேயன் தலைமையில்நடைபெற்றது.

    பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் 1000 பேருக்கு இலவச பட்டா வழங்க ஏற்பாடு

    • பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் 1000 பேருக்கு இலவச பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தாசில்தார் சிவா.கார்த்திகேயன் தலைமையில் நடை பெற்றது.

    பண்ருட்டி

    பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் ஜமாபந்தி திருவிழா நேற்றுதொடங்கி 21ஆம் தேதி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சமாபந்தி திருவிழாவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கிராம நிர்வாக அதிகாரிகள் கூட்டம் தாசில்தார் சிவா.கார்த்திகேயன் தலைமையில் நடை பெற்றது. இதில் துணை தாசில்தார்கள் சிவா சேகர் கிருஷ்ணா மற்றும் அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் தாசில்தார் சிவகார்த்திகேயன் பேசும்போது கூறியதாவது:ஜமாபந்தி நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி ஜமாபந்தி நிறைவு விழா விரைவில் நடைபெற உள்ளது. நிறைவு விழாவில் 1000 பேருக்குஇலவச மனைபட்டா வழங்கப்பட உள்ளது ஒவ்வொரு கிராம நிர்வாக அதிகாரிகளும் தங்களது கிராமத்தில் உள்ள வீடு மனை இல்லாத ஏழை எளிய யோருக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×