search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வைத்தீஸ்வரன்கோவிலில், தருமபுர ஆதீனம் அடிபிரதட்சணம் செய்து வழிபாடு
    X

    அடிபிரதட்சணம் செய்து வழிபாடு மேற்கொண்ட தருமபுர ஆதீனம்.

    வைத்தீஸ்வரன்கோவிலில், தருமபுர ஆதீனம் அடிபிரதட்சணம் செய்து வழிபாடு

    • தனிசன்னதியில் செல்வ முத்துக்குமரர், செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் அருள்பாலிக்கின்றனர்.
    • சூரசம்ஹார விழாவின்போது முருகப்பெருமான் சிவபெருமானிடம் வேல்வாங்கி சம்ஹாரத்திற்கு புறப்படுவது ஐதீகம்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வை த்தீஸ்வ ரன்கோ யிலில் தருமபுரம்ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்திய நாதசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் தனிசன்னதியில் செல்வ முத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

    இங்கு நடைபெறும் சூரச ம்ஹார விழாவின்போது முருகப்பெருமான் சிவபெரு மானிடம் வேல்வாங்கி சம்ஹாரத்திற்கு புறப்படுவது ஐதீகம். இதனிடையே செல்வ முத்துக்குமாரசுவாமிக்கு கந்த சஷ்டி விழா சிறப்பு ஹோமங்களுடன் தொடங்கியது.

    முன்ன தாக கிருத்திகை மண்ட பம் எழுந்தருளியவள்ளி, தெய்வானைஉடனாகிய செல்வ முத்துக்குமா ரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கா ரம் செய்து மகாதீபா ராதனை காட்டப்பட்டது.

    இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமா ச்சாரிய சுவாமிகள்பங்கேற்று தரிசனம் செய்தார்தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் தருமபுரம் ஆதீனம் அடிபிரதட்சணம் செய்து வழிப்பட்டார்.

    இதில் கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிச னம் செய்தனர்.

    Next Story
    ×