என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அரசு பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
- ஆரம்ப கட்டத்திலேயே மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல்.
- குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் வேண்டும்.
சுவாமிமலை:
மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பேரணியில் 6 முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ஆரம்ப கட்டத்திலேயே மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல், அக்குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் ஆகியவைகளை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, முழக்கங்கள் எழுப்பினர்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது.
Next Story






