search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் பா.ஜனதா ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    ஆறுமுகநேரியில் பா.ஜனதா ஆலோசனை கூட்டம்

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா மண்டல நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டு பேசினார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மண்டல நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதி களுக்கான ஆலோசனை கூட்டம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொதுச் செயலா ளர்கள் ராஜா, சிவமுருக ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டு பேசினார். கடந்த மாதம் 13, 14-ந் தேதிகளில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை யின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் அளித்த வரவேற்பு, அதற்குப் பிந்தைய கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை தலைவர்கள் செல்வராஜ், ரேவதி, மாநில மகளிர் அணி செயலாளர் நெல்லையம்மாள், மாவட்ட செயலாளர்கள் கனல் ஆறுமுகம், அர்ஜுன், பாலாஜி, வீரமணி, மண்டல தலைவர்கள் ஆறுமுகநேரி முருகேச பாண்டியன், திருச்செந்தூர் நவமணிகண்டன், ஆழ்வை கிழக்கு குமரேசன், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ண குமார், அரசு தொடர்பு மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஸ்டீபன் லோபோ, மத்திய அரசு திட்டங்கள் பிரிவு ஆறுமுகநேரி மண்டல தலைவர் அமலரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×