என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூரில் பரபரப்பு : தனியார் ஓட்டலை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
- 2 தினங்களுக்கு முன்பு அய்யனார் கடலூர் பஸ் நிலையம் முன்பு உள்ள தனியார் ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார்.
- அப்போது ஓட்டல் ஊழியருக்கும், அய்யனாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் இந்திரா நகரை சேர்ந்தவர் அய்யனார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு அய்யனார் கடலூர் பஸ் நிலையம் முன்பு உள்ள தனியார் ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார். அப்போது ஓட்டல் ஊழியருக்கும், அய்யனாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் காயமடைந்த அய்யனார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் அய்யனார் மற்றும் ஓட்டல் ஊழியர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் தஷ்ணா தலைமையில் இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் தனியார் ஓட்டலை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அய்யனாரை தாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினார்கள். அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். மேலும் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையம் பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்