search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு

    • தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு.
    • புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் கட்டிடங்களின் கட்டுமான பணிகள் ஆய்வு.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது-

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் இந்தலூர்ஊராட்சி கடையக்குடி கிராமத்தில் பிளவர் பிளாக் சாலை பணி நடைபெற்றுவருவதை குறித்தும் கடையக்குடி கிராமத்தில் உள்ள ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    பின்னர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களின் கல்வி தரம் குறித்தும், நெடுங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவி யர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி பேரூ ராட்சி பஸ் நிலையத்தில் பேரூராட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் , புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் கட்டிடங்களின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கனகராஜ், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×