என் மலர்
உள்ளூர் செய்திகள்

குனியமுத்தூரில் கல்லூரி மாணவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
- போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
குனியமுத்தூர்,
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் அபிஷேக் (வயது20). இவர் கோவை பாலக்காடு ரோடு கோவைப்புதூர் பிரிவு அருகே உள்ள வசந்தம் நகரில் வசித்து தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்க்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
பின்னர் இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
Next Story






