என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.17.50 லட்சம் ஏமாற்றியதாக புகார்
- வீட்டுமனை வாங்கி தருவதாக 11 லட்சம் காசோலையாகவும், 6 1/2 லட்சம் பணமாகவும் பெற்றுள்ளார்.
- இதுவரை பணமும் தரவில்லை, வீட்டுமனையும் வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 31). கடலூர் பெரியகாட்டு பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கிருஷ்ணமூர்த்திடம் வீட்டுமனை வாங்கி தருவதாக 11 லட்சம் காசோலையாகவும், 6 1/2 லட்சம் பணமாகவும் என மொத்தம் 17 1/2 லட்சம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார். ஆனால்இதுவரை பணமும் தரவில்லை, வீட்டுமனையும் வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணமூர்த்தி குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வெங்கடேசன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






