என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்
- ஓசூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தலைமை தாங்கி, உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
ராகுல் காந்தி, எம்.பி.பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதை கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த இந் நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தலைமை தாங்கி, உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் மகாதேவன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இதில்,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரகுமான், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன் , ஹரீஷ் உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story






