search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாம்பவர்வடகரையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கட்டிட தொழிலாளி பலி
    X

    முத்து செல்வம் 

    சாம்பவர்வடகரையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கட்டிட தொழிலாளி பலி

    • முத்து செல்வம் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
    • படுகாயமடைந்த முத்து செல்வத்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர் வடகரை எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் முத்து செல்வம் (வயது22). கட்டிட தொழிலாளி.

    இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஒரு தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் காசிவிஸ்வநாதன் மற்றும் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×