search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நாமக்கல் புதன்சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை
    X

    நாமக்கல் புதன்சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை

    • புதன் சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை மாட்டுச்சந்தை நடந்தது.
    • மொத்தம் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த புதன் சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை மாட்டுச்சந்தை நடந்தது.

    மாடுகளை வாங்கவும், விற்கவும் கேரளா, கர்நாடகா மாநிலம் மற்றும் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

    இதில் இறைச்சி மாடு ரூ.15,000-க்கும், கன்று குட்டி ரூ. 8000-க்கும், பசு மாடு ரூ.20,000-க்கும், எருமை மாடு ரூ.25,000-க்கும் விற்பனை

    செய்யப்பட்டது. மொத்தம் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×