என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை
- மகளிர் பிரிவுகளான மெக்கானிக், மெக்க ட்ரானி க்ஸ், கோபா ஆகிய தொழி ற்பிரிவுகளில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன.
- ஆண் பயிற்சியா ளர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை, பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியு ள்ளதாவது,
தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
2022ம் ஆண்டு சேர்க்கை க்கு 2 கட்டங்களாக கலந்தாய்வு முடிந்துள்ளது. இதில் ஓரா ண்டு தொழிற் பிரிவுகளான வெல்ட ர்கள், தொழி ற்சாலை வ ர்ணம் பூசுபவர் போன்ற ஓரா ண்டு தொழி ற்பிரிவு களில் ஒரு சில இடங்க ள்காலியாக உள்ளன.
மகளிர் பிரிவுகளான மெக்கானிக், மெக்க ட்ரானி க்ஸ், கோபா ஆகிய தொழி ற்பிரிவுகளில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. என வே இதில் சேர விருப்பம் உள்ள 8ம்வகுப்பு 10ம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக வந்து சேர்ந்து கொள்ளலாம்.
மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண சலுகை, விலையில்லா சைக்கிள், சீருடைகள், காலணி வரைபடக்கரு, நோட்டு புத்தகம் போன்றவை வழங்கப்படும்.
தவிர ஆண் பயிற்சியா ளர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை, பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று த்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






