search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்-அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு
    X

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்-அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

    • கூட்டத்திற்கு தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சாமிபையன் தலைமை தாங்கினார்.
    • முதல்வர் கோவை மாவட்டத்திற்கு ஊராட்சிகளில் சாலைகள் அமைப்பதற்காக ரூ.68 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.

    வடவள்ளி,

    தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நரசிபுரத்தில் நடந்தது. தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சாமிபையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அவர் கூறுகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் முதல்-அமைச்சர் பாகுபாடு இன்றி செயல்பட்டு வருகிறார். தமிழக முதல்வர் சிறப்பு திட்டத்தின் கீழ் இதுவரை கோவை மாவட்டத்திற்கு ஊராட்சிகளில் சாலைகள் அமைப்பதற்கான ரூ.68 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.

    விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். முதல்-அமை்சர் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்து செயல்படுத்தி வரும் திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் இலக்காக இருக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம், மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.பி. நாகராஜன், துணை மேயர் வெற்றிச்செல்வன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×