search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே  சாலையின் நடுவே நிற்கும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
    X

    சாலையின் நடுவே நிற்கும் மின்கம்பத்தை படத்தில் காணலாம்.

    பாவூர்சத்திரம் அருகே சாலையின் நடுவே நிற்கும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

    • சாலையின் மையப்பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டிருந்ததால் அதனை கடந்து செல்ல பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • போக்குவரத்து இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள சமாதானபுரம் 11-வது வார்டு மங்கம்மாள் சாலை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் மங்கம்மாள் சாலையையே பயன்படுத்தி வரும் நிலையில் குடியிருப்புகள் வருவதற்கு முன்பாக சாலையின் மையப் பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டிருந்ததால் தற்பொழுது பொதுமக்கள் அச்சாலையை கடந்து செல்ல பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். பள்ளி குழந்தைகள் செல்வதற்கு ஆட்டோ, வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே வர முடியாத சூழ்நிலையால் பெற்றோர்கள் அருகில் உள்ள மற்றொரு தெருவில் கொண்டு தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறாக சாலையின் நடுவே நிற்கும் மின்கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மின்சார வாரியத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×