search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை மீனவர்களின் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வலைகள் கொள்ளை
    X

    நாகை மீனவர்களின் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வலைகள் கொள்ளை

    • கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 படகுகளில் வந்தனர்.
    • கரைதிரும்பியது மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் மீனவர்கள்புகார் செய்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன்.

    இவருக்கு சொந்தமான பைபர் படகில் முனீஸ்வரன், அதே பகுதியை சேர்ந்த முகுந்தன், காளியப்பன் மற்றும் வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர்.

    புஷ்பவனத்திற்கு தென்கிழக்கே சுமார் 24 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 2 படகுகளில் வந்த அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள், இவர்கள் விரித்திருந்த வலையில் சுமார் ரூ, 4 லட்சம் மதிப்புள்ள 450 கிலோ வலையை வெட்டி எடுத்துச் சென்று விட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை புஷ்பவனம் கடற்கரைக்கு திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடற்கரை போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×