search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    136 இடங்களில் இலவச காய்ச்சல் மருத்துவ முகாம்கள்
    X

    கிருஷ்ணகிரியில் காய்ச்சல் பரிசோதனை முகாமை கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    136 இடங்களில் இலவச காய்ச்சல் மருத்துவ முகாம்கள்

    • கிராமபுறபகுதிகளில் 136 இலவச காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
    • மருத்துவ பரிசோதனை செய்துக் கொண்டு தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை கோட்டை உருது நடுநிலைப்பள்ளி, மற்றும் அண்ணாநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் பரிசோதனை மருத்துவ முகாம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள் மற்றும் கிராமபுறபகுதிகளில் 136 இலவச காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.

    இந்த முகாமில் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் மற்றம் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர் என அனைவருக்கும் காய்ச்சல், இரத்த அழுத்தம், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்ளுக்கு மருந்துகள், மாத்திரைகள், மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் தங்களின் உடலை பரிசோதனை செய்துக்கொண்டு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்களிடம் மருத்துவ பரிசோதனை செய்துக் கொண்டு தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்.

    பொதுமக்கள் தங்களின் வீடுகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து க்கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டிகளை மூடி வைத்திடவேண்டும். குடிநீரை நன்கு காயவைத்து குடிக்க வேண்டும்.

    இந்த சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாமில் 36 நடமாடும் மருத்துவ குழு மற்றும் பள்ளி சிறார்களுக்காக சிறப்பு குழு என 400 மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) ரமேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர்கள் இனியள் மண்டோதரி, தாமரைதென்றல், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×