என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே ஆடு மேய்க்கும் தகராறில் மோதல்- 11 பேர் மீது வழக்கு
- இசக்கியப்பன்,தாயப்பனுக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
- தாயப்பன், கிருஷ்ணன் என்ற கிட்டு ஆகியோர் ராஜாவை கம்பால் தாக்கினர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள படலையார்குளம், கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது38). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தாயப்பனுக்கும் (45) ஆடுகள் மேய்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
நேற்று மூங்கிலடி பகுதியில் இசக்கியப்பனின் ஆடுகளை அவரிடம் வேலை பார்க்கும் ராஜா (22) மேய்த்து கொண்டிருந்தார். அப்போது தாயப்பனும் அங்கு ஆடுகளை மேய்க்க வந்தார். இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தாயப்பன், அவரது மகன் கிருஷ்ணன் என்ற கிட்டு (18) ஆகியோர் சேர்ந்து ராஜாவை கம்பால் தாக்கினர். இதுபோல இசக்கியப்பன், படலை யார்குளத்தை சேர்ந்த இசக்கி (27), ராஜா (22), மற்றும் 7 பேர் சேர்ந்து தாயப்பனை கம்பால் தாக்கினர். இந்த மோதலில் ராஜா, தாயப்பன் காயமடைந்தனர்.
இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் இதுதொடர்பாக இது தரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






