search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

    • மன்னார்குடி சாலை ரெயில்வே கேட் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
    • பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில் மாற்றுத்தி றனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதில் தலைமையாசிரியர் அமுதரசு தலைமை தாங்கி னார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மங்கள் அன்பழகன் பேரணியை தொடங்கி வைத்தார்.

    பேரணி பள்ளியிலிருந்து புறப்பட்டு மன்னார்குடி சாலை ரெயில்வே கேட்டு சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

    பேரணியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பது, தொடர்ந்து கற்றலில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் ஆசிரியர் பயிற்றுநர் ஸ்ரீதரன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல்,ஆலங்காடு அரசு உயர்நிலைப்ப ள்ளியிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, ஆசிரியர் பயிற்றுநர் ஸ்ரீதரன் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×