search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு- தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 25 பயணிகள் படுகாயம்
    X

    அரசு- தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 25 பயணிகள் படுகாயம்

    • கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
    • இடுப்பாடுக்குள் சிக்கிய அரசு பஸ் டிரைவரை பொதுமக்கள் போராடி மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    அரியலூரில் இருந்து தஞ்சை நோக்கி ஒரு தனியார் பஸ் இன்று புறப்பட்டது. அந்த பஸ்ஸில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

    அந்த பஸ் இன்று மதியம் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வெள்ளச்சி மண்டபம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது தஞ்சையில் இருந்து திருவையாறு மார்க்கமாக ஒரு அரசு பஸ் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என கூக்குரலிட்டனர்.

    இந்த விபத்தில் 2 பஸ்களின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. டிரைவர் உள்பட 25-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். இதில் அரசு பஸ் டிரைவர் இடுப்பாடுக்குள் சிக்கினார். அவரை பொதுமக்கள் போராடி பத்திரமாக வெளியே மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து சிலர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.‌ இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.‌

    Next Story
    ×