என் மலர்
உள்ளூர் செய்திகள்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
- குழந்தையின் பெற்றோர் குழந்தையிடம் விசாரித்தபோது குழந்தை பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளது.
- குழந்தையின் பெற்றோர் கூடுவாஞ்சேரி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமியிடம் புகார் அளித்தனர்.
வண்டலூர்:
சென்னை புது பெருங்களத்தூர், லால்பகதூர் சாஸ்திரி தெருவில் வசித்து வருபவர் திவாகர் (24) ஏசி மெக்கானிக். இவருக்கு திருமணம் ஆகவில்லை, இவர் பக்கத்து வீட்டாரின் 4 வயது குழந்தையை அவரது வீட்டில் விளையாட விடுவது வழக்கம்.
கடந்த 2 தினங்களுக்கு முன் குழந்தையை விட்டுச் சென்றபோது திவாகர் அந்த 4 வயது பெண் குழந்தையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த பாட்டி திவாகரின் செயலை பார்த்து கடும் கோபம் கொண்டு சத்தம் போட ஆரம்பித்தார். பின்னர் குழந்தையின் பெற்றோர் குழந்தையிடம் விசாரித்தபோது குழந்தை பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் கூடுவாஞ்சேரி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமியிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். திவாகர் போலீசார் வருவதை பார்த்து ஓட முயற்சித்தார். சுதாரித்துக்கொண்ட மகளிர் போலீசார் திவாகரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.






