search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜேடர்பாளையம் அருகே தோட்டத்திலிருந்தபவர் டில்லருக்கு தீ வைத்த 2 பேர் சிறையில் அடைப்பு
    X

    ஜேடர்பாளையம் அருகே தோட்டத்திலிருந்தபவர் டில்லருக்கு தீ வைத்த 2 பேர் சிறையில் அடைப்பு

    • குழந்தைவேல் (வயது 52). விவசாயி. இவரது தோட்டம் ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் உள்ளது.
    • தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் டில்லர் தீ வைத்து எரிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 52). விவசாயி. இவரது தோட்டம் ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் உள்ளது. இங்கு இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சுற்றி சூரிய மின்கம்பி வேலி போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கரைப்பா ளையம் பகுதியைச் சேர்ந்த நித்யா என்ற இளம்பெண் படு கொலை செய்யப்பட்டார். இவரது உறவினரான குழந்தைவேல் மீது சிலர் காழ்ப்புணர்ச்சியில் இருந்து வந்தனர்.

    இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் டில்லர் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் விவசாயத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாய்களை மர்மநபர்கள் அடித்து நொறுக்கினர்.

    இதுமட்டுமின்றி தோட்டத்தின் நுழைவா யிலில் அடைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டில், மின்சாரம் பாய்ச்சி கொலை முயற்சி யிலும் ஈடுபட்டிருந்தனர்.

    இதுகுறித்து குழந்தைவேல் நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதில், வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர் சதாசிவம், தமிழரசன், மோகன்ராஜ், ரமேஷ், சந்திரசேகர் மற்றும் அங்கு வேலை செய்யும் ஆட்கள் மீது புகார் தெரிவித்திருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் தமிழரசன், மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை நாமக்கல் ஜே 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மேலும் இரு வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×