என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாவட்டத்தில் 35 ஆயிரம் மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்
    X

    கோவை மாவட்டத்தில் 35 ஆயிரம் மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்

    • கோவையில் 254 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது.
    • பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக் கான வினாத் தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டன.

    கோவை,

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (13-ந் தேதி) தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத்தேர்வு 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரையும் நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடக்கிறது.

    கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 35 ஆயிரத்து 541 பேரும், பிளஸ்-1 பொதுத் தேர்வை 34 ஆயிரத்து 259 பேரும், எஸ்.எஸ். எல்.சி. பொதுத்தேர்வை 41ஆயிரத்து 526 பேரும் எழுத உள்ளனர். இதற்காக கோவை மாவட் டத்தில் 254 தேர்வுமையங்கள் அமைக் கப்பட்டு உள்ளன.

    இதில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக் கான வினாத் தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டு வரப் பட்டன. அவை கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட் டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வினாத்தாள்கள் கோவை மாவட்டத்தில் 12 கட்டுக் கோப்பு மையங்களில் பாது காப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

    இதில், கோவை டவுன் ஹாலில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் பொதுத்தேர்வுக்கான வினாத் தாள்கள் பாது காப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.மேலும் அந்த அறைக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது. போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். அங்கு கண்காணிப்பு காமி ராக்களும் பொருத் தப்பட்டு உள்ளன.

    இது போல் கோவை மாவட்டத்தில் மற்ற வினாத்தாள் மையங்க ளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×