search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    11 இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு
    X

    மழைநீர் வடிகால் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

    11 இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு

    • ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
    • திருவலஞ்சுழி தொடங்கி தஞ்சாவூர் நோக்கி ஒரு பிரிவாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பாபநாசம்:

    கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சா லையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழ்நாடு அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

    இந்த பணிகள் தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் தொடங்கி கும்பகோணம் நோக்கி ஒரு பிரிவாகவும், திருவலஞ்சுழி தொடங்கி தஞ்சாவூர் நோக்கி ஒரு பிரிவாகவும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் பகுதியில் பசுபதி கோயில், அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, வழுத்தூர், சரபோஜிராஜபுரம், ரெகுநாதபுரம், பண்டா ரவாடை, ராஜகிரி, பாபநாசம், திருப்பாலைத்துறை, சுவாமிமலை ஆகிய 11 இடங்களில் மழைநீர் வடிகால் வசதிக்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உதவி பொறியாளர் பழனியப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    Next Story
    ×