search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் ரூ.1.50 கோடி செலவில் அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள்
    X

    கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் ரூ.1.50 கோடி செலவில் அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள்

    • வகுப்பறை கட்டிடங்களை அணுமின் நிலைய இயக்குநர் சுதிர் பாபன்ராவ் ஷெல்கே திறந்து வைத்தார்.
    • முதன்மை கண்காணிப்பாளர் செந்தாமரக்சன், சி.எஸ்.ஆர் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 95 லட்சம் ரூபாய் செலவில் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதேபோல் கூவத்தூர் அடுத்த கடலூர் மீனவர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு 55 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டது.

    இந்த கட்டிடங்களை அணுமின் நிலைய இயக்குநர் சுதிர் பாபன்ராவ் ஷெல்கே, பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். முதன்மை கண்காணிப்பாளர் செந்தாமரக்சன், சி.எஸ்.ஆர் நிர்வாகிகள் சுபாமூர்த்தி, வாசுதேவன், ஜெகன், சின்ன கோவிந்தன், கருணா மூர்த்தி, ஊராட்சி தலைவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    Next Story
    ×