என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி.

    குளச்சல் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • அரிசி மூடைகளை பதுக்கி வைத்த நபர் குறித்து விசாரணை
    • பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர் தேவராஜ், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் பயிற்சி சப் - இன்ஸ்பெக்டர் ரிச்சர்டு ஜோசப் ஆகியோர் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

    வாணியக்குடி பகுதியில் செல்லும்போது அங்கு மீன் கடை அருகில் ஒரு மறைவான இடத்தில் சிறு பிளாஸ்டிக் மூடைகளில் ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது 40 மூடைகளில் சுமார் 2 டன் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.உடனே போலீசார் அரிசி மூடைகளை மீட்டு வாடகை வாகனம் மூலம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.தொடர்ந்து போலீசார் அங்கு அரிசி மூடைகளை பதுக்கி வைத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    Next Story
    ×