search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்கழி திருவாதிரையையொட்டி கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் 6-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்பு படம் 

    மார்கழி திருவாதிரையையொட்டி கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் 6-ந்தேதி நடக்கிறது

    • குகநாதீஸ்வரர் கோவில் மூலஸ்தானத்தில் குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5 ½ அடி உயர சிவலிங்க சிலை அமைந்து உள்ளது.
    • பக்தர்களுக்கு “களி” பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநா தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது ஆகும்.

    இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே கட்டிஉள்ளார் என்று வரலாற்றுச் சான்று கள் கூறுகின்றன. இங்கு குகன் என்ற முருகக்கடவுள் ஈஸ்வரன் என்றசிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக்காரணமாயிற்று. இந்த கோவில் மூலஸ் தானத்தில் குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5 ½ அடி உயர சிவலிங்க சிலை அமைந்து உள்ளது. அப்படிப் பட்ட புகழ்பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனம்நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினமான வருகிற 6-ந்தேதி காலை இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையொட்டி அன்று அதிகாலை 3 மணிக்கு மிருத்ஞ்சய ஹோமமும் 4 மணிக்கு சிவபெருமானுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், களபம், மஞ்சள்பொடி, மாபொடி, விபூதி, தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்பின்னர் 5 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கி றது. அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட தட்டு வாகனத்தில் நடராஜரும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு "களி" பிரசாதமாக வழங்கப் படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வ ரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வரு கின்றனர்.

    Next Story
    ×