என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
நாகர்கோவிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் முதல் வாரத்தில் வருகை
- மேயர் மகேஷ் தகவல்
- மாநகராட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வைத்து திறக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மகேஷ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடம் ரூ.10கோடியே 50 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. அலுவலக பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்பொழுது காம்பவுண்டு கட்டுமான பணி நடந்து வருகிறது.
மாநகராட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வைத்து திறக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தின் முன்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் கட்சி அலுவலகமும் புதுப்பிக்கப்பட உள்ளது. கலைஞர் சிலை திறப்பு விழா மற்றும் மாநகராட்சி அலுவலகம் திறப்பு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து அழைத்தோம். பிப்ரவரி மாதத்தில் வருவதாக கூறியிருந்தார். தற்பொழுது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் மார்ச் முதல் வாரத்தில் வருவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வருகிற 30-ந்தேதி நேரில் சந்தித்து மாநகராட்சி அலுவலக கட்டிடத்திற்கான புக்லேட் மற்றும் கலைஞர் சிலை அமைப்பதற்கான புக் லைட்டை வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்