search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களிமார் விஷ்ணு கோவிலில் உண்டியல் உடைத்து திருடிய வாலிபர் கைது
    X

    கைது செய்யப்பட்ட வினித் 

    களிமார் விஷ்ணு கோவிலில் உண்டியல் உடைத்து திருடிய வாலிபர் கைது

    • திருட்டு போன காணிக்கை பணம் ரூ.6 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்

    கன்னியாகுமரி:

    குளச்சல் களிமாரில் உள்ள மகாவிஷ்ணு கோவிலில் கடந்த வாரம் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் பூஜை முடிந்து பூசாரி கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோயில் முன் கிரில் திறந்து கிடந்ததைக்கண்டு கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    நிர்வாகிகள் விரைந்து கோயிலுக்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது.மர்ம நபர் யாரோ? இரவு வேளையில் கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்றது தெரிய வந்தது.

    திருட்டு போன காணிக்கை பணம் ரூ.6 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் பிரபாகரன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் அப்பகுதி சி.சி.டி.வி.கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.இந்நிலையில் குளச்சல் போலீசார் நேற்று இரும்பிலி பகுதியில் ரோந்து செல்லும்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார்.போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் ஓட முயற்சித்தார்.போலீசார் அவரை மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் லியோன்நகரை சேர்ந்த வினித் (வயது 28) என்பதும் களிமார் விஷ்ணு கோவில் உண்டியல் உடைப்பில் தொடர்புடையதும் தெரிய வந்தது. மேலும் வினித் கருங்கல், நித்திரவிளை போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளிலும் திருட்டு வழக்குகளில் தொடர்புடையது தெரிய வந்தது. இதையடுத்து குளச்சல் போலீசார் வினித்தை கைது செய்தனர்.

    Next Story
    ×