என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரியில் 5 பஸ்கள் கல்வீசி உடைப்பு
- டவுண் பஸ்கள் இன்று காலை 1 மணி நேரம் தாமதமாக இயக்கம்
- போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் காங்கிரசார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், தக்கலை சப் -டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இரவு 2 ஷிப்டுகளாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி உள்பட தலைவர்கள் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டுள்ளது. தேங்காய் பட்டினத்தில் இருந்து மார்த்தாண்டத்துக்கு புறப்பட்டு சென்ற அரசு பஸ் நேற்று இரவு புதுக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கல்வீசி தாக்கப்பட்டது. இதில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. இதுபோல கொல்லங்கோடு அருகே சாத்தான்கோடு பகுதியில் பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது. மார்த்தாண்டத்தில் இருந்து குளச்சல் நோக்கி சென்ற அரசு பஸ் நட்டாலம் பகுதியில் கல்வீசி உடைக்கப்பட்டது. இதே போல் குழித்துறை, திருவட்டாறு பகுதிகளிலும் அரசு பஸ்கல் கல்வீசி உடைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 5 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பஸ்கள் மீது கல் வீசப்பட்டதையடுத்து வடசேரி பஸ் நிலையம் அண்ணா பஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பஸ் நிலையத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரவு வழக்கமாக கிராமப்புறங்களில் நிறுத்தப்படும் பஸ்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது .பெரும்பாலான பஸ்கள் டெப்போக்களுக்கு கொண்டு வரப்பட்டது. வழக்கமாக டெப்போக்களில் இருந்து பஸ்கள் அதிகாலை 4:30 மணிக்கு பஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு 5 மணிக்கு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.ஆனால் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக பஸ்கள் இயக்கப்பட்டது. ராணி தோட்டம் டெப்போவில் இருந்து வடசேரி பஸ் நிலையத்திற்கு ஒரு மணி நேரம் தாமதமாக பஸ்கள் கொண்டுவரப்பட்டு காலை 6 மணிக்குபிறகு கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. பஸ்கள் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்ட தால் காலை நேரத்தில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ்நி லையங்களில் பயணிகள் காத்திருந்தனர். சென்னை நெல்லை மதுரை திருவனந்தபுரம் கோவை தஞ்சாவூர் போன்ற வெளியூர்களுக்கு சென்ற பஸ்கள் வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டு சென்றன.மாவட்டத்தில் உள்ள 12 டெப்போகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்