search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் அருகே ஜவுளிக்கடை -டாக்டர் வீட்டில் திருடிய 17 வயது சிறுவன் கைது
    X

    சுசீந்திரம் அருகே ஜவுளிக்கடை -டாக்டர் வீட்டில் திருடிய 17 வயது சிறுவன் கைது

    • ரூ. 23 ஆயிரம் மற்றும் ரூ.55 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருட்டு போயிருந்தது
    • சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தற்போது தான் வெளியே வந்துள்ளார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே உள்ள தலைநகர் பிள்ளை யார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 27).

    இவர் சுசீந்திரம் பைபாஸ் ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத் தன்று பிரபு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.மறு நாள் காலையில் கடைக்கு வந்த போது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    கடை மேஜையில் வைத்திருந்த ரூ. 23 ஆயிரம் மற்றும் ரூ.55 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருட்டு போயிருந்தது. இது குறித்து பிரபு சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் போலீசார் கைப்பற்றினார்கள். அந்த காட்சி களில் கொள்ளை யன் முக கவசம் அணிந்து கையுறை அணிந்து தொப்பி யுடன் திருடுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

    கடந்த 22-ந்தேதி மணக்குடி பகுதியில் ஒரு டாக்டர் வீட்டிலும் வாலி பர் ஒருவர் இதே போல் முககவசம், கையுறை அணிந்து கைவரிசை காட்டி யிருந்ததார். எனவே இந்த 2 சம்பவத்திலும் ஈடுபட்டிருப்பது ஒரே கொள்ளையன் தான் என்பது உறுதி செய்யப்ப ட்டது. கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசா ரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

    அவரை ரகசிய இடத்தி ற்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்த னர். அப்போது டாக்டர் வீட்டிலும் ஜவுளிக்கடை யிலும் திருடியதை ஒப்புக் கொண்டார். பிடிபட்ட நபர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

    17 வயதான அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் ஏற்கனவே வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தற்போது தான் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    Next Story
    ×