search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சலில் மோட்டார் சைக்கிள் கால்வாய்க்குள் பாய்ந்தது; பிளஸ்-1 மாணவர் பலி
    X

    குளச்சலில் மோட்டார் சைக்கிள் கால்வாய்க்குள் பாய்ந்தது; பிளஸ்-1 மாணவர் பலி

    • நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் கடியபட்டணத்திலிருந்து புறப்பட்டனர்.
    • நிதின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் மணவா ளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நிதின் (வயது 16), சிஜோ (16).

    இவர்கள் இருவரும் பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ளனர். எனவே பள்ளி விடுமுறையில் இருக்கும் அவர்கள், தங்கள் நண்பன் முட்டத்தை சேர்ந்த ரிஜோவுடன் நேற்று நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் கடியபட்டணத்திலிருந்து புறப்பட்டனர்.

    அவர்கள் குளச்சல் சைமன்காலனி, ஏ.வி.எம்.கால்வாய் அருகில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ஓடியது. தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள் அதே வேகத்தில் கால்வாய்க்குள் பாய்ந்தது. அந்த வழியாக சென்றவர்கள் விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் குளச்சல் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் தேவராஜ் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் நிதின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    உயிருக்கு போராடிக்கொண்டி ருந்த சிஜோ, ரிஜோ ஆகியோரை போலீசார் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிதின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×