search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா - மாவட்டம் முழுவதும் சோதனை அதிகரிப்பு
    X

    கன்னியாகுமரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா - மாவட்டம் முழுவதும் சோதனை அதிகரிப்பு

    • குமரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தினசரி 2 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
    • கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நாகர்கோவில்:


    குமரி மாவட்டத்தில் கொரோனா முதல் இரண்டு அலையின் போது ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.


    3-வது அலை தாக்கத்தி லும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்து உள்ளனர்‌. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 19420 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 79 ஆயிரத்து 937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து உள்ளனர்.

    தற்போது 4-வது அலை பரவ தொடங்கியுள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவ டிக்கை களை மேற்கொ ண்டு வருகிறார்கள்.


    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு பூஜ்ஜியத்தில் இருந்த நிலையில் கடந்த வாரத்தில் தினசரி 2 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

    குமரி மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினமும் 350-க்கும் மேற்பட்டோருக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் யாருக்கும்கொரோனா பாதிப்பு இல்லை.


    இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் ஒன்பது பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோ னாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் முன்சிறை ஒன்றியத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிக்க ப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகளில் சுகாதா ரத்துறை அதிகா ரிகள் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த வர்களின் விவரங்களை சேகரித்து அவர்களையும் தனிமை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி யில் கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டில் 47 வயது இளம்பெண் ஒருவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    Next Story
    ×