search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் 9-ந்தேதி 6.94 லட்சம் குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்
    X

    குமரியில் 9-ந்தேதி 6.94 லட்சம் குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்

    • இம்மாத்திரைகள் உட்கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    வளரும் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு குடற்புழுக்கள் இருந்தால் ரத்த சோகை ஏற்பட்டு எடை குறைவுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.

    மேற்கண்ட குறை பா டுகளை களைவதற்கு வருடத்திற்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை கொடுப்பதுடன் கை கழுவுதல், கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் தன் சுத்தம் பேணுதல் ஆகி யவற்றை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்ப டும் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபா டுகளை நீக்கலாம்.

    இந்த வருடம் வருகிற 9-ந்தேதி அன்று 1 முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வய திலுள்ள பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல் பண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கைஎடுக் கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தினை முழுமையாக நல்ல முறையில் செயல்ப டுத்தும் பொருட்டு சுகாதாரத்துறை, கல்வித் துறை மற்றும் ஊட்டச்சத்து துறை இணைந்து செயல் பட அறிவுறுத்தப்பட்டுள் ளனர். அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற் றும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலும், கல்லூரி யில் பயிலும் மாணவர் களுக்கு கல்லூரியில் வைத்து மதிய உணவுக்குப்பின் ஒரு மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பள்ளி கும், 20 வயது முதல் 30 வயது உள்ள பெண்கள், கல்லூரி செல்லா பெண் களுக்கு ஊட்டச்சத்து மையத்திலும், துணை சுகாதார நிலையத்திலும் 9 மணி முதல் 2 மணி வரை வழங்கப்படுகிறது. மாணவர்கள் மாத்திரைகள் உட்கொண்டார்கள் என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட் டுள்ளது. இந்த மாத்தி ரையை கடித்து சுவைத்து சாப்பிடவேண்டும்.

    குமரி மாவட்டத்தில் சுமார் 6,19,455 குழந்தைகளும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் 75,043 பேரும் என மொத்தம் 6 லட்சத்து 94 ஆயிரத்து 498 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேவையான மாத்தி ரைகள் தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நல்ல முறையில் செயல்படுத்தும் விதமாக நேற்று மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் அனைத்து துறைகளையும் சார்ந்த அலுவலர்களின் ஒருங் கிணைப்பு குழு கூட்டமானது நடைபெற்றது.

    இம்மாத்திரைகள் உட் கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்ப டுவதில்லை. மாத்திரை வழங்கப்படும் வருகிற 9-ந்தேதி அன்று உடல் நலக்குறைவோ அல்லது மற்ற காரணங்களால் மாத்திரை உட்கொள்ளாத குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு 16-ந்தேதி அன்று மாத்திரை வழங்கப்படும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதனை உறுதி படுத்தி அவர்களது நல் வாழ்விற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    Next Story
    ×