என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாய்-தந்தையை வெட்டிய வழக்கை வாபஸ் பெற கூறியதால் தீர்த்து கட்டினேன் - கைதான வாலிபர் வாக்குமூலம்
- அருண் ஜெனிசுக்கும் சுரேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருண் ஜெனிஸ் சித்தப்பா சுரேஷை சரமாரியாக குத்தினார்.
- கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை தாயாரை அரிவாளால் வெட்டி சித்தப்பா சுரேஷ் கொலை செய்ய முயன்றார்
நாகர்கோவில் :
சுசீந்திரம் அருகே குலசேகரன் புதூர் கொத்தன் குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா தாஸ். இவரது மூத்த மகன் காஸ்டின் இளைய மகன் சுரேஷ் (வயது 45). அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று சுரேஷ் கூத்தன் குளம் பகுதியில் உள்ள நூலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது சகோதரரின் மகன் அருண் ஜெனிசுக்கும் சுரேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருண் ஜெனிஸ் சித்தப்பா சுரேஷை சரமாரியாக குத்தினார்.
மேலும் அந்த பகுதியில் கிடந்த கல்லால் தலையில் அடித்தார். இதில் ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.இது பற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஜெயசித்ரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அருண் ஜெனிஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அருண் ஜெனிஸ் போலீசாரிடம் கூறியதாவது:-
சுரேஷ் எனது சித்தப்பா ஆவார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர். அந்த திருமணத்தை எனது தந்தை காஸ்டின் மற்றும் தாயார் சரஸ்வதி ஆகியோர் தடுத்ததாக கூறி அவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை தாயாரை அரிவாளால் வெட்டி சித்தப்பா சுரேஷ் கொலை செய்ய முயன்றார்.இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறி தகராறு செய்து வந்தார். இது தொடர்பாக என்னிடமும் கூறினார். இதனால் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை சரமாரியாக குத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட அருண் ஜெனிசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்