என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ஒற்றைக் காலில் மாற்றுத்திறனாளி சைக்கிள் பயணம்
- நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- இளைஞர்களிடையே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம்
கன்னியாகுமரி:
நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள கனியாகுளம் பாறையடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 54).
இவர் ஒற்றைக் காலை இழந்த மாற்றுத்திறனாளி ஆவார். பெயிண்டராக வேலைபார்க்கும்இவர் இளைஞர்களிடையே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி இவரது சைக்கிள் பயணத்தின் தொடக்க விழா கன்னியா குமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் முன்பு நடந்தது.
இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான வக்கீல் ஆர். மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவரது சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், அகஸ்தீஸ்வரம் பேரூர் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் டென்னிஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பய ணம் புறப்பட்ட இவர் நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னையை அடுத்த மாதம் (செப்டம்பர்) பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான 15-ந்தேதி சென்றடைகிறார். நாளொன்றுக்கு நூறு கிலோமீட்டர் வீதம் மொத்தம்1500 கிலோமீட்டர் தூரம் இவர் சைக்கிள் பணம் மேற்கொள்ள உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்