search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
    X

    கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    • பறக்கை அருகே உள்ள மேலசெட்டியார் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 51) கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம்
    • சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    பறக்கை அருகே உள்ள மேலசெட்டியார் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 51) கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் ,ருந்து வந்தது. குடிப்பழக்கம் அதிகமாகி கடந்த சில வருடங்களால் நோயால் பாதிக்கப்பட்டு நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை வீட்டில் முன் காலில் இருந்து சேகர் வயிற்று வழி என சத்தம் போட்டு கொண்டிருந்தார். உடனே அவரது மனைவி பகவதியம்மாள் ஒரு ஆட்டோ பிடித்து நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏதோ விஷமருந்து சாப்பிட்டு உள்ளார்.ஆதலால் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சென்றபோது சேகரை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி பகவதியம்மாள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×