search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்.ஜி.ஓ.காலனியில் மது விற்றவர் கைது
    X

    என்.ஜி.ஓ.காலனியில் மது விற்றவர் கைது

    • சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்
    • 10 மது பாட்டில்கள் எந்தவித அனுமதியும் இன்றி வைத்திருந்தது தெரியவந்தது

    கன்னியாகுமரி :

    சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் போலீசார் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர் கையில் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தனர்.

    அதில் 10 மது பாட்டில்கள் எந்தவித அனுமதியும் இன்றி வைத்திருந்தது தெரியவந்தது. அதிக லாப நோக்கத்கோடு விற்பதற்காக அவற்றை வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த தோடு, மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் வடக்கு குண்டலை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 36) என்பது தெரியவந்தது.

    அவர் மீது வழக்குப்பதிவு செய்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×