என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அருகே பெண் தற்கொலை வழக்கில் மினி பஸ் டிரைவர் கைது
    X

    கோப்பு படம் 

    குளச்சல் அருகே பெண் தற்கொலை வழக்கில் மினி பஸ் டிரைவர் கைது

    • சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக, சிபின் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு
    • னிபஸ் டிரைவர் சிபின் என்பவர் செல்போனில் பேசி அதிக தொல்லை கொடுத்தது உறுதி

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள காரியாவிளையைச் சேர்ந்தவர் சுஜிலா. மருந்தாளுநர் பணி செய்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்தார்.

    அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது மர்மமாக இருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சுஜிலாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

    அதில் ஏற்பட்ட சந்தே கத்தின் அடிப்படையில் போலீசார் சுஜிலாவுக்கு வந்த செல்போன் அழைப்புகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.இதில் குருந்தன்கோடை சேர்ந்த மினிபஸ் டிரைவர் சிபின் என்பவர் செல்போனில் பேசி அதிக தொல்லை கொடுத்தது உறுதி செய்ய ப்பட்டது.

    இதையடுத்து சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக, சிபின் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுஜிலா தற்கொலை வழக்கும்,தற்கொலை தூண்டுதல் வழக்காக மாற்றப்பட்டது.

    இந்தநிலையில் வழக்கில் தொடர்புடைய மினி பஸ் டிரைவர் சிபின் கைது செய்யப்பட்டார்.

    Next Story
    ×