search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் இன்று கடல்சீற்றம்
    X

    கன்னியாகுமரியில் இன்று கடல்சீற்றம்

    • படகு போக்குவரத்து 1மணி நேரம் தாமதம்
    • குறைந்த அளவு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரில் இன்று காலை வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்ப ட்டது. வங்க கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி யது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்து உள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதி கொந்தளிப்பாக இருந்தது.

    கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, ஆரோக்கிய புரம், கோவ ளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் சீற்றமாவும் கொந்தளி ப்பாகவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம், கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்ட பத்துக்கு இன்று காலை காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அதிகாலை முதலே படகுத் துறையில் வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமா ற்றம் அடைந்தனர்.

    அவர்கள் கடற்கரையில் நின்றபடியே விவேகா னந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து சென்றனர். இந்த நிலை யில் கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகா னந்தர் நினைவு மண்ட பத்துக்கு படகு போக்கு வரத்து தொடங்கியது.

    Next Story
    ×